Saturday, January 1, 2022

சிதம்பர ரகசியம்

 


இந்த உலகின் ஒட்டுமொத்த மையப் புள்ளி அமைந்திருக்கும் இடமாக தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையைக் கண்டு நவீன விஞ்ஞான உலகம் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுகளுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவேத்தான் நன்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த சக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டி உள்ளனர். இக்கோயிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத பேருண்மைகள் இக்கோயிலின் அமைப்பில் புதைந்து உள்ளன.

     சர்வதேச ஆன்மீக அமைப்புகள் கடந்த எட்டு ஆண்டுகளாக சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிந்து, இக்கோயிலை, நம் முன்னோர் கட்டினர். நவீன ஆய்வகங்கள் ஏதும் இல்லாத அக்காலத்தில் இதை நம் முன்னோர் கண்டுபிடித்துள்ளனர் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அணுத்துகள்கள் அசைந்தப்படியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும் படி சிலை அமைத்து அதை பூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனைதான்.

     இதை 5000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த திருமூலரின் சிந்தனையும், ஆற்றலும், சக்தியும் மகத்தானது. திருமூலரின் திருமந்திரம், உலகற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர இன்றைய அறிவியலுக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம். சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல தகவல்கள் கூறிவரும் வேளையில் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட முடியாதவை. முன்னோர் செய்த அனைத்து செயல்களும், ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது. மன்னர்கள் கட்டிய பிரம்மாண்டமான கற்கோயல்களுக்கு பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதை கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.

மனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோயிலில் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோயிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை 21,600 தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது. இது ஒரு மனிதன் தினமும் சராசரியாக 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கும். இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன.

     சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் காஸ்மிக் டான்ஸ் என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். கருவறையில் நடராஜரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும் போது கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை தங்கத்தினால் ஆன வில்வதள மாலை தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, மாலை தொங்கும், இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகய உருவில் இருக்கிறார் என்பதே ஆகும். இதுதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

                         ( படித்ததில் பிடித்தது )


புத்துணர்ச்சி

 


இந்த நாட்டில்,

     சாலையை மாற்ற வேண்டும்,

     கல்வி முறையை மாற்ற வேண்டும்,

     மருத்துவ முறையை மாற்ற வேண்டும்,

     உணவு முறையை மாற்ற வேண்டும்,

     அந்நிய கலாசாரத்தை மாற்ற வேண்டும்,

     நாவில் இருந்து உதிரும் மொழியை

     தாய் மொழியாக மாற்ற வேண்டும்,

     இவற்றை எல்லாம் கூட ஒரு நாள் மாற்றி விடலாம்

     உன் சோம்பலை மாற்றினால் ...

      ஒவ்வொரு நாளயும் சோம்பலை மறந்து

     புத்துணர்ச்சியோடு வரவேற்ப்போம்!


Saturday, November 27, 2021

விவசாயம் சிந்திக்க

 

             

      

ஒரு கத சொல்லுவாங்க ஊர்ல.

எமலோகம் இருக்கே எமலோகம் அங்க பாவ புண்ணியக் கணக்குப் பாப்பாங்களாம்.பாவம் பண்ணுன ஆளுக இடபக்கம் நிப்பாகளாம்; புண்ணியம் பண்ணுன ஆளுக வல பக்கம் நிப்பகளாம்.

புண்ணியம் செஞ்சவக சொர்க்கத்துகுப் போங்கன்னு அனுப்பிச்சிருவாகளாம்; ஊர்வசி ரம்பையெல்லாம் வருவாகளாம் ஒத்தாசைக்கு.

பாவம் செஞ்ச ஆளுகள எமதர்மன் ஆளுக ரெண்டு கையும் புடிச்சி ‘வாங்கய்யா வாங்க’ன்னு கூட்டிட்டுப் போயிக் கொதிக்கற எண்ணெய்க் கொப்பரையில வீசுவாகளாம்;பாம்பு புத்துக்குள்ள படுக்கப் போடுவாகளாம்;எரியற தீயில தலைகீழாக் கட்டித் தொங்கவிடுவாகளாம்.

இப்படி எமதர்மன் ‘நல்லாட்சி’ நடத்தி வந்த காலத்துல ஒரு நாளு பெருங்கூத்தாகிப் போச்சாம் எமலோகத்துல.

அந்த வருசம் ஏடு போட்டுப் பாத்ததுல புண்ணியம் பண்ணுனவக ஏழெட்டுப் பேர்தானாம். பாவம் பண்ணுனவக பட்டியல் எடுத்து பாத்தா அது போகுதாம் லட்சக்கணக்குல.

எமதருமருக்கு தல சுத்துது;கூடவே கிரீடமும் சேந்து சுத்துது.

கொப்பர கட்டுபுடியாகுமா எண்ணெ விக்கிற வெலையில?

அத்தன பாம்புகளுக்கு எங்க போறது? நாகலோகத்துல வேற நாலுமாசமாப் பாலுக்கு வெல கூட்டச் சொல்லிப் பசுமடுக வேல நிறுத்தமாம்.

புத்திக்கு ஒண்ணும் எட்டல; யாரை யோசனை கேக்கறது?

சிவபெருமானைக் கேக்கலாம்ன்னா மார்க்கண்டேயன் விவகாரத்துல ஏற்பட்ட

மனதாங்கல் இன்னும் தீரல.

விஷ்ணுவப் போய்க்கேட்டு வரலாம்னா நம்ம எருமைக்குப் பாற்கடல் நீந்திப் பழக்கம் இல்ல. பிரம்மாவப் போய்க் கேக்கலாம்னா அந்தாளு எந்த மூஞ்சிய எங்க வச்சிருப்பாருன்னே தெரியமாட்டேங்குது.

ஒண்ணும் புடிபடல எமதருமருக்கு.

பாசக்கயித்துல அவரா முடிச்சிப் போட்டு அவரா அவுத்துக்கிட்டிருக்காரு ரொம்ப நேரமா.

திடீர்னு தம்புராவோட ஒரு பாட்டுக் கேக்குது. நிமிந்து பாத்தா வைகுண்டத்துல வடை சாப்பிட்டுட்டுக் கைலாசத்துக்குக் காப்பி சாப்பிடப் போய்க்கிட்டுருக்காரு நாரதரு.

‘வாய்யா வாய்யா’ன்னாரு எமதர்மரு,

வந்தாரு நாரதரு.

“எனக்கொரு பிரச்சன” இழுத்தாரு எருமைகாரரு.

“என்ன? கள்ளக் கணக்கு எழுதிக் காசு சம்பாரிச்சு இந்திரலோக வங்கியில போட்டு ஏமாத்துறானா சித்ரகுப்தன்?”

“அட அதில்ல நாரதரே. பாவகணக்குப் பண்ணுனவக எண்ணிக்கை கூடிப்போச்சு; எடமில்ல நரகத்துல; என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்”.

“அட நீங்க ஒண்ணு… இவுகள நரகத்துல தள்ளணும் அவ்வுளவுதானே? நான் பறந்து பறந்து பாத்த அளவுல பூலோகத்துல இந்தியா இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகளப் பூரா அங்க வெவசாயம் பண்ண அனுப்பி வச்சீங்கன்னு வச்சீக்குங்க வேலை முடுஞ்சது.”

“ஆகா ஒம்மக் கட்டித் தழுவணும் போல இருக்கு”ன்னு எந்திருச்சாரு எமதருமரு.

தம்புராவத் தவற விட்டுட்டு ஓடி ஒளிஞ்சு போனாரு நாரதரு.

நாரதர் சொன்ன யோசனப்படி இந்தியாவுல விவசாயம் பண்ண நரகத்துல இருந்து அன்னைக்கு அனுப்பிவைக்க ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும்

நின்னபாடில்ல.

                            (மூன்றாம் உலகப் போர் - வைரமுத்து)

ஆரம்பத்தில் உதட்டில் புன்னகையை தவழ வைத்த வரிகள் இறுதியில் கண்ணளை கலங்க வைத்தது.

நாம் எல்லோரும் மெய்ட் இன் இந்தியாவா?

 


நாம் தினமும் உபயோகப்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தயாரிப்புக்களாகவே உள்ளன. அதை நாம் பெரிதும் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பார்ப்போம்.

சோப்பு;

லக்ஸ் – ஐக்கிய இராஞ்சியம் (uk)

டவ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

பியர்ஸ் – இங்கிலாந்த்

டெட்டால் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

லைபாய் – அமெரிக்கா

கைபேசி;

சாம்சங் – தென் கொரியா

நோக்கியா – பின்லாந்த்

மைக்ரோ சாப்ட் – அமெரிக்கா

பிலாக் பெரி – ஹங்கேரி

சொனி – ஜப்பான்

மடி கணினி;

ஹச்பி – ஐக்கிய இராஞ்சியம் (UK)

டெல் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

ஆப்பிள் – கலிபோர்னியா

வையோ – ஜப்பான்

லெனோவா – சீனா

தொலைக்காட்சி;

சோனி – ஜப்பான்

எல்ஜி – தென் கொரியா

பிலிப்ஸ் – நெதர்லாந்த்

ஹிடாச்சி – ஜப்பான்

சாம்ப்;

சன் சில்க் – ஐக்கிய இராஞ்சியம் (uk)

பேண்டீன் – சுஜர்லாந்து

ஹெட் அண்ட் சோல்ஜர்ஸ் – அமெரிக்கா

இப்படி நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டின் தயாரிப்புகளாகவே உள்ளன. ஆனால் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டின் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. உதாரணமாக சீன மக்கள் சீன நாட்டின் தயாரிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன. அது போல ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது நமது கடமை. ஆனால் அவ்வாறு நாம் செய்வது இல்லை. இந்தியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியாவிலேயே முக்கியத்துவம் இல்லாத போது உலக அளவில் எவ்வாறு முக்கியத்துவம் பெறும்.

நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று பார்ப்பதே இல்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். இனிமேலாவது இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போம்.

Saturday, May 8, 2021

அவரை ஊர்- பெங்களூர் உருவான கதை

 


இதென்ன அவரை ஊர் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? பெங்களூர் தான் அவரை ஊர்!

பெங்காலு என்ற ஒரு வித அவரையிலிருந்து உண்டானதாகும் பெங்களூர். இது கன்னடப் பெயர்.

ஒருகாலத்தில் மைசூரை ஆண்டு வந்த வீரப்பன்னாளா என்ற அரசன் வேட்டைக்குச் சென்றபோது தன் பரிவாரங்களிலிருந்து தனியே பிரிந்து, இருளில் வழித்தவறி ஒரு குடிசையை அடைந்தான். அங்கு ஒரு வயதான மூதாட்டி இருந்ததைக் கண்டு தனக்கு உணவு தரும் படி வேண்டினார் அரசர் .

அந்த மூதாட்டியிடம் அச்சமயம் பெங்காலி என்ற அவரையைத் தவிர உணவாகக் கொடுக்க வேறொன்றும் இல்லை. ஆகவே அந்த அவரையை வேகவைத்து அரசனுக்கு பரிமாறினார் மூதாட்டி. அரசனும் அதை உண்டு தன் குதிரைக்கும் கொடுத்தார். மறுநாள் காலையில் தலைநகருக்கு திரும்பியவுடன் அச்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, தனக்கு உதவி செய்த அந்த மூதாட்டிக்கு சன்மானம் அளித்ததுடன், அந்த இடத்தில் ஓர் ஊரையும் உண்டாக்கி, அதற்கு பெங்காலு என்றும் பெயரிட்டார். அப்பெயர் மாறி பெங்களூர் என்றாயிற்று

Wednesday, May 5, 2021

ரசத்தின் மகிமை

 



மிளகு:

     சுவை அரும்புகள் தூண்டுவது; புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.

சீரகம்:           

     செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரி செய்வது. மனிதத் தேவைக்கான மக்னீசியம் கொண்டது.

பூண்டு:

     கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது; பக்கவாதம் தடுப்பது; ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம்

கொண்டது.

கடுகு:

     எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது; நல்ல கொழுப்பு உடையது.

புளி:

     வயிற்றுக் கோளாறு சரிசெய்து, இருதயம் வலிமை செய்வது.

தக்காளி:

     வெய்யிலுக்கெதிராய்த் தோல்நலம் காப்பது; வைட்டமின் ஏ, டி இரண்டும் உடையது. மாரடைப்பு புற்றுநோய் இரண்டையும் தடுப்பது.

மிளகாய்:

     வைட்டமின் ஏ, சி இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம் அதிகரிப்பது.

கருவேப்பிலை:

     தோல் தொற்று தடுப்பது; சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது; தாதுக்களும் நார்ச்சத்தும் மிக்கது.

மல்லித்தழை:

     இரும்புச்சத்து மிக்கது; எழும்புத் தேய்மானம் தடுப்பது.

                                           (படித்ததில் பிடித்தது)

நாம் அன்றாடம் உட்கொள்ளும் ரசத்தில் இவ்வளவு மகிமை இருக்கிறது என்று தெரிய வரும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. நம் முன்னோர்கள் உணவு பொருட்களில் கையாண்டுள்ள அறிவியலும் தெரியவருகிறது.


சிக்கனமும் சேமிப்பும்

 


சிறு துளி பெறுவெள்ளம் போல

     சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!

சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!

     ஓரறிவு எறும்பிற்க்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!

ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!

     உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை

தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்

     சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்

நீ வாழ்க்கை என்னும் படியை

வெற்றியுடன் தாண்ட முடியும்!

சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

     விரும்பிய படி கொண்டு செல்லலாம்!

சிக்கனமாய் இரு! சேமித்து பழகு!