Sunday, February 24, 2019

எழில் கொஞ்சும் இயற்கை

               




காலையில் கண் விழித்தவுடன் புதிதாய் ஒரு பொழிவு!

ஏதோ ஒரு வெளிச்சம் என் கண்களை வருடிச் சென்றது;

கண்துடைத்து வியப்புடன் புதிதாய் மலர்ந்த சூரிய காந்தியோ?

என்று பறிக்க முயன்று ஏமாற்றத்துடன்  திரும்பினால்;

முன்னே உறைக்காற்று சீறிப்பாய பின்னே சிறகடித்து

பறவை கூட்டம் துறத்தி விளையாடி கொண்டிருந்தது;

உடன் நானும் விளையாட மனம் ஏங்கியது!

ஏக்கத்துடன் தலை குனிந்த போது

இளந்தென்றல் காற்று என் மனதிற்கு இனிமை அளித்து

என்னையும் உடன் அழைத்து சென்றது; அங்கே

ஆர்பறித்து வரும் நீர் ஏதோ முணுமுணுத்து

என்னை கடந்து சென்றது; எட்டிப் பார்த்தால்

கண்ணை கவரும் வெண்முத்து!

கையை விட்டு எடுத்தால் தண்ணீர் மட்டுமே வந்தது!

மேலே பார்த்து உண்மையை உணர்ந்தேன்;

கோபத்துடன், என் மனதில் ஒரு கேள்வி!

நீ தான் இயற்கையோ? ஆனால்

எனக்கு செயற்கையை தான் தெரியும் என்றேன்;

அப்போது, பொருமையாய்,

இயற்கையின்றி செயற்கை உண்டோ?  என்று

நீ சொல்லாமல் சொன்னாய்! நான்

கேட்காமல் உணர்ந்தேன்; திடீரென்று

இனிய குயிலின் குரலோசை என்

செவியை தட்டி எழுப்பியது; அதனால்

நிஜத்தை விட்டு இயற்கையோடு மூழ்கியிருந்த

என் கனவிலிருந்து பிரியா விடைபெற்றேன்!



Sunday, February 17, 2019

தெருவோரம் உதிரும் உயிர்ப்பூக்கள்


                    




மார்கழி மாத குளிரும்,
பங்குனி மாத வெய்யிலும்
பழகிபோச்சு!
பருவத்தில் இருக்கும்
வித்தியாசம்
மறந்துபோச்சு!

கொட்டும் மழையையும்; அடிக்கும் வெய்யிலையும்
தாங்கிக்கொள்ளும் பக்குவம் வந்துருச்சு;
குடிசை போட காசு இல்லை என்பதால்!

கால் தேய உழைச்சாலும்
இருக்க ஒரு இடம் கிடைக்கவில்லை!
சிலரோ பரிதாப படுகிறார்கள்!
சிலரோ ஏலனப்படுத்துகிறார்கள்!

என்னடா வாழ்க்கை என்றாலும்
இருக்க கூடவா இடம் கிடைக்காது
இந்த உலகில் என்னும் நம்பிக்கையில்
வந்த சிறு நிம்மதியோடு
ஓடுகிறது எங்கள் பகல் பொழுது!

பகலே அதிகம் என நினைத்தானோ
என்னவோ இரவை படைத்தான்
அந்த இறைவன்!
நித்திரையில் நிம்மதியை
தொலைத்தோம் நாங்கள்!

தெருவோரம் கிடக்கும் எங்களை
இறைவனே ஏரெடுத்து
பார்க்கவில்லை!
அந்த வழியே வரும் வாகனம் ஓட்டுபவன்
கண்களுக்கு நாங்கள் குப்பைகளாகவே
தெரிவோம் போல!

அவன் சில நேரங்களில் எருமை வாகனம்
ஓட்டி வருபவனாய் இருப்பதனால்
எமலோகமே கொண்டுபோய் சேர்த்துவிடுகிறான்!

உயிரை வருபவர் கையில்
கொடுத்து கண் மூடுகிறோம் - அவன்
மனம் வைத்தால் கண் திறப்போம்!
இல்லையென்றால்;
அவனே பத்திரமாக கொண்டுபோய்
சேர்த்துவிடுவான்;
கைலாசமோ! வைகுந்தமோ!



Sunday, February 10, 2019

பள்ளியின் முதல் நாள்





என்னமோ பட்டப்படிப்பு படிப்பது போல

தேவையானதை எல்லாம் தயார் செய்ததும்!

அ, ஆ போட்டு போட்டு பழகியதும்!

போகும் வழியில் அனைவரிடமும் பள்ளிக்குச்

செல்வதை தெரியமாய் கையசைத்து கூறியதும்! ஆனால்

பள்ளியில் நுழைந்ததும் பயம் தொற்றிக்கொண்ட நிமிடங்களும்!

காதிற்கு கை எட்டவில்லை என்றாலும் எட்டி எட்டி

     காதை தொட்டு ஏமாற்றியதும்!

அம்மாவின் கையை பற்றி இருக்கும் வரை

     இருந்த அந்த நம்பிக்கை ஆசிரியர் என்

கையை பிடித்து கூப்பிடும் போது கண்ணீராய் கரைந்ததுமாக

     இப்படி, கண்களில் கண்ணீர் வடித்த அந்த

பள்ளி முதல் நாள் இன்று நினைத்தால்

     இதழ்களில் புன்னகை தவழ்கிறது!

    



Sunday, February 3, 2019

கல்லூரிக் காலம்






புன்னகை செய்து வரவேற்ற

முகம் தெரியாத தோழிகள்!

பின் உறவென பழகிய நிமிடங்கள்!

     போதிமரமாய் திகழ்ந்த வகுப்பறை!

பேசியே கடத்திய பாடவேளைகள்!

     புரியாத மொழியில் தாலாட்டு பாடும் ஆசிரியர்கள்!

வகுப்பறையில் என்னை கேட்காமல்

     வரும் குட்டித் தூக்கம்!

உள்ளங்கை கோர்த்து திரிந்த நாட்கள்!

     மனதின் நினைவிலிருந்து கரையாத நிமிடங்கள்!

கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட

     இந்த கல்லூரிக் காலம் – இனி

கண் மூடினால் கனவில் மட்டுமே!