காலையில் கண் விழித்தவுடன்
புதிதாய் ஒரு பொழிவு!
ஏதோ ஒரு வெளிச்சம்
என் கண்களை வருடிச் சென்றது;
கண்துடைத்து வியப்புடன்
புதிதாய் மலர்ந்த சூரிய காந்தியோ?
என்று பறிக்க முயன்று
ஏமாற்றத்துடன் திரும்பினால்;
முன்னே உறைக்காற்று
சீறிப்பாய – பின்னே சிறகடித்து
பறவை கூட்டம் துறத்தி
விளையாடி கொண்டிருந்தது;
உடன் நானும் விளையாட
மனம் ஏங்கியது!
ஏக்கத்துடன் தலை
குனிந்த போது
இளந்தென்றல் காற்று
என் மனதிற்கு இனிமை அளித்து
என்னையும் உடன்
அழைத்து சென்றது; அங்கே
ஆர்பறித்து வரும்
நீர் ஏதோ முணுமுணுத்து
என்னை கடந்து சென்றது; எட்டிப் பார்த்தால்
கண்ணை கவரும் வெண்முத்து!
கையை விட்டு எடுத்தால்
தண்ணீர் மட்டுமே வந்தது!
மேலே பார்த்து
உண்மையை உணர்ந்தேன்;
கோபத்துடன், என்
மனதில் ஒரு கேள்வி!
நீ தான் இயற்கையோ? ஆனால்
எனக்கு செயற்கையை
தான் தெரியும் என்றேன்;
அப்போது, பொருமையாய்,
இயற்கையின்றி செயற்கை
உண்டோ? என்று
நீ சொல்லாமல் சொன்னாய்! நான்
கேட்காமல் உணர்ந்தேன்; திடீரென்று
இனிய குயிலின்
குரலோசை – என்
செவியை தட்டி எழுப்பியது; அதனால்
நிஜத்தை விட்டு
இயற்கையோடு மூழ்கியிருந்த
என் கனவிலிருந்து
பிரியா விடைபெற்றேன்!



