Sunday, March 17, 2019

யார் அவர்?


                                                  



சுகமன சுமையாய் மார்பில் சுமந்து வளர்த்தவர்!

     தொலைநோக்கு சிந்தனைக்கு வித்திட்டவர்!

மிரட்டலில் பயந்து பணிய வைத்தவர்!

     அன்பில் நனைய வைத்தவர்!

தைரியத்தை ஊட்டி வளர்த்தவர்!

     தோள் கொடுத்து வளர்த்த தோழன்!

உன்னால் முடியும்

என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்!

     என்றும் உறுதுனையாக இருப்பவர்;

என்னை நினைத்து என்றும் பெறுமைபடுபவர்!

     நான் செய்யும் தவறை சுட்டி காட்டுபவர்!

என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கை

     அவருக்கு என்றும் இருக்கும்!

அவர் யாராக இருக்க முடியும் என் தந்தையை தவிர?

Thursday, March 7, 2019

வாய்ப்புகளை உருவாக்குவோம் சாதனை படைப்போம்

           



விண்வெளியில் கால் பதித்த “கல்பனா சாவ்லாவோ”;

தன் முதுகில் குழந்தையையும் கையில்

வாளையும் சுமந்த “ஜான்சி ராணியோ”;

பாரதத்தின் முதல் பெண் மருத்துவரான

     “முத்துலட்சுமி ரெட்டியோ”;

பாரதத்தின் முதல் பெண் நீதிபதியான

      “பத்மினி ஜேசுதுரையோ”;

பாரதத்தின் முதல் பெண் காவல் துறை அதிகாரியான

       “கிரண் பேடியோ”;

வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை!

தன் இலட்சியத்தின் வழி வாய்ப்புக்களை

உருவாக்கி சாதனை என்னும்

சிகரத்தை எட்டிப்பிடித்தார்கள் ஆனால்

நீ மட்டும் ஏன் பெண்ணே வாய்ப்புக்காக காத்திருக்கிறாய்?

இந்த மகளிர் தினத்தில் இருந்தாவது வாய்ப்புக்காக

காத்திருக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கி

சாதனை படைக்க முயற்சிப்போம்!

Sunday, March 3, 2019

சாலை



கள்ளும் முள்ளுமாக நிறைந்திருந்தேன்;

மண் சாலையாக மாற்றினார்கள்!

மண் சாலையாக இருந்தேன்;

     தார் சாலையாக மாற்றினார்கள்!

தார் சாலையாக இருந்தேன்;

     காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!

இப்படி எல்லாம் மாறினாலும் என்

     மேனி மட்டும் குளிகளாலே நிறைந்துள்ளது!

இது நான் செய்த தவறா? இல்லை

என்னை செய்தவர்களின் தவறா?
                                   
                                                                               
                                                                                     இப்படிக்கு,
                                                                       கண்ணீருடன் சாலை.