Sunday, April 28, 2019

வரவேற்பு



                   



பள்ளியின் நினைவுகளை ரோஜா மலராக

     சூடியிருக்கும் உங்களுக்கு இந்த கல்லூரி

ரோஜா வனமாக அமைந்திட;

     சுற்றி இருக்கும் அனைவரும் தோழியாக பழகிட;

வேப்பங்காயாய் கசக்கும் தருணத்தையும்

     வெல்லமாக இனிக்கும் தருணமாக மாற்றிட;

இந்த கல்லூரி வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்

     நீங்காத நினைவுகளாக மலர்ந்திட!

தாளம் பூவாய் மணந்திட! இன்சுவை நல்கிட!

     குயிலின் குரல் ஆரவாரத்தை கூட்ட

கைத்தட்டல்களையே தாளமாக்கி! எங்கள் அன்பையே

     மல்லிகை மலராகத் தூவி வரவேற்கிறோம்;

சகோதரியாக அல்ல உங்கள் அன்பிற்குறிய தோழியாக!

Sunday, April 14, 2019

அன்பிற்காக ஏங்கும் இரு மனம்


                   அன்பிற்காக ஏங்கும் இரு மனம்  


இங்கோ,
     அந்த பிஞ்சு விரலை கொஞ்சி விளையாடவும்,
     கண்ணத்தில் அன்பு முத்தமிடவும்,
     நிலாச் சோறு ஊட்டி மகிழ்ந்திடவும்,
     குறும்புத் தனத்தை கண்டு ரசித்திடவும்,
     அம்மா என்ற வார்த்தையை செவி வழி கேட்டிடவும்
     ஏங்குது அவளின் உள்ளம்!


அங்கோ,
     கீழே விழுந்தால் தூக்கி விடவும்,
     அன்போடு கொஞ்சி விளையாடவும்,
     பாசத்தோடு கண்டிக்கவும்,
     யாருமில்லாத தனிமை!
     தன்னந்தனிமையில் அன்பைத் தேடி
     தவிக்குது பிஞ்சு நெஞ்சம்!
அவளின் ஏக்கம் இந்த குழந்தைக்கு தெரியவில்லையா?
இல்லை அந்த குழந்தையின் தவிப்பு இவளுக்கு புரியவில்லையா?
ஏன் இந்த இடைவெளி? இவர்களை தடுப்பது எது?
    

Sunday, April 7, 2019

அன்புள்ள அம்மா


                  



அன்பின் வடிவமான கனிவுள்ளம் கொண்டவள் அவள்!

      தன் குழந்தையின் சிரிப்பில் தன்னையே மறந்திடுவாள்!

முளைத்து விடுவோம் என்னும் எதிர்ப்பார்ப்பில் தான்

     மண்ணுக்குள் புதைகிறது அந்த விதை! ஆனால்

இவளோ தன் குழந்தைக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி

     தன் வாழ்க்கையையே செலவிடுவாள்!

பிள்ளையின் எச்சில் சோற்றையும் அமிர்தம் என உண்டிடுவாள்!

நிலவை காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவாள்!

அவளுக்கு தெரியுமா? அந்த நிலவும் ஏக்கம் கொள்ளும்;

     இந்த அன்னையின் அன்பை பெற என்று!

ஒவ்வொன்றிலும் தியாகம் செய்கிறாள்;

     அதிலும் மகிழ்ச்சி தான் அவளுக்கு!

சிலர் வாழ்க்கையில் தான் தியாகம் செய்வார்கள் ஆனால்

     இவளோ தன் குழந்தைக்காக தன்

வாழ்க்கையையே தியாகம் செய்கிறாள்!

     மனிதரில் மட்டுமா இந்த அன்பு!

ஒவ்வொரு உயிரிலும் அன்னையின் அன்பு

     அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்!

நானும் முயற்சிக்கிறேன் அவள் அன்பை வெல்ல!

     ஆனால் முயன்று முயன்று தோற்கிறேன் அந்த

தோல்வியிலும் சுகம் தான் அவள் மடியில்

     குழந்தையாய் தவழும் போது!