Wednesday, May 5, 2021

அலெக்சாண்டரின் அறிவுக்கண் திறந்த நிமிடம்

 


மாவீரர் அலெக்சாண்டரின் ஆசிரியராக விளங்கியவர் தத்துவமேதை டயோ ஜெனீஸ். இவர் ஒரு நாள் இரண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அலெக்சாண்டர் ஆசிரியர் அவர்களே மண்டை ஓடுகளை பார்த்து என்ன செய்து கொண்டுருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் இந்த இரண்டு மண்டை ஓடுகளுக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்……என்றார். அலெக்சாண்டரும் பார்த்து விட்டு எந்த வேருபாடும் இல்லை என்றார். அதற்கு ஆசிரியர்…. இந்த இரண்டில் ஒன்று உன் தந்தையுடையது. மற்றொன்று அவரது அடிமையுடையது. எது உன் தந்தையுடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்க முயன்றேன். முடியவில்லை….. என்றார் இதை கேட்டதும் ஆணவம் மிக்க அலெக்சாண்டரின் அறிவுக் கண்கள் திறந்தன.


No comments:

Post a Comment