விண்வெளியில் கால்
பதித்த “கல்பனா சாவ்லாவோ”;
தன் முதுகில் குழந்தையையும்
கையில்
வாளையும் சுமந்த
“ஜான்சி ராணியோ”;
பாரதத்தின் முதல்
பெண் மருத்துவரான
“முத்துலட்சுமி ரெட்டியோ”;
பாரதத்தின் முதல்
பெண் நீதிபதியான
“பத்மினி ஜேசுதுரையோ”;
பாரதத்தின் முதல்
பெண் காவல் துறை அதிகாரியான
“கிரண் பேடியோ”;
வாய்ப்புக்காக
காத்திருக்கவில்லை!
தன் இலட்சியத்தின்
வழி வாய்ப்புக்களை
உருவாக்கி சாதனை
என்னும்
சிகரத்தை எட்டிப்பிடித்தார்கள்
– ஆனால்
நீ மட்டும் ஏன்
பெண்ணே வாய்ப்புக்காக காத்திருக்கிறாய்?
இந்த மகளிர் தினத்தில்
இருந்தாவது வாய்ப்புக்காக
காத்திருக்காமல்
வாய்ப்புக்களை உருவாக்கி
சாதனை படைக்க முயற்சிப்போம்!

No comments:
Post a Comment