Sunday, January 27, 2019

கனவு





கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் !

உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை

தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் !

எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே !

கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த

கடவுளும் கனவு கண்டிருப்பாரோ !

சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;

சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !

அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை

முதலில் உன்னில் தான் கண்டானோ !

மனிதனின் நினைவளைகள் நீ என்றால்

உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ?

கனவு என்னும் மூன்றழுத்தும் ,

கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்

கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?

No comments:

Post a Comment