மார்கழி மாத குளிரும்,
பங்குனி மாத வெய்யிலும்
பழகிபோச்சு!
பருவத்தில் இருக்கும்
வித்தியாசம்
மறந்துபோச்சு!
கொட்டும் மழையையும்; அடிக்கும்
வெய்யிலையும்
தாங்கிக்கொள்ளும் பக்குவம் வந்துருச்சு;
குடிசை போட காசு இல்லை என்பதால்!
கால் தேய உழைச்சாலும்
இருக்க ஒரு இடம் கிடைக்கவில்லை!
சிலரோ பரிதாப படுகிறார்கள்!
சிலரோ ஏலனப்படுத்துகிறார்கள்!
என்னடா வாழ்க்கை என்றாலும்
இருக்க கூடவா இடம் கிடைக்காது
இந்த உலகில் என்னும் நம்பிக்கையில்
வந்த சிறு நிம்மதியோடு
ஓடுகிறது எங்கள் பகல் பொழுது!
பகலே அதிகம் என நினைத்தானோ
என்னவோ இரவை படைத்தான்
அந்த இறைவன்!
நித்திரையில் நிம்மதியை
தொலைத்தோம் நாங்கள்!
தெருவோரம் கிடக்கும் எங்களை
இறைவனே ஏரெடுத்து
பார்க்கவில்லை!
அந்த வழியே வரும் வாகனம் ஓட்டுபவன்
கண்களுக்கு நாங்கள் குப்பைகளாகவே
தெரிவோம் போல!
அவன் சில நேரங்களில் எருமை வாகனம்
ஓட்டி வருபவனாய் இருப்பதனால்
எமலோகமே கொண்டுபோய் சேர்த்துவிடுகிறான்!
உயிரை வருபவர் கையில்
கொடுத்து கண் மூடுகிறோம் - அவன்
மனம் வைத்தால் கண் திறப்போம்!
இல்லையென்றால்;
அவனே பத்திரமாக கொண்டுபோய்
சேர்த்துவிடுவான்;
கைலாசமோ! வைகுந்தமோ!

No comments:
Post a Comment